sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை: நிரம்புமா அணைகள், கண்மாய்கள்

/

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை: நிரம்புமா அணைகள், கண்மாய்கள்

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை: நிரம்புமா அணைகள், கண்மாய்கள்

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை: நிரம்புமா அணைகள், கண்மாய்கள்


ADDED : அக் 25, 2024 04:43 AM

Google News

ADDED : அக் 25, 2024 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் கனமழையினால் செண்பகத் தோப்பு பேயனாறு, பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளுக்கு நீர் வரத்து ஏற்பட துவங்கியுள்ளது. இதனால் கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் மழை பெய்து அணைகள், கண்மாய்கள் நிரம்புமா என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

கடந்தாண்டு பெய்த மழையின் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம், வத்திராயிருப்பு பகுதிகளில் பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பி விவசாயிகள் உற்சாகத்துடன் நெல் சாகுபடி செய்தனர். கடந்த சில மாதங்களாக போதிய மழை பெய்யாமல் கண்மாய்களில் தண்ணீர் குறைந்து வறண்டு விடும் நிலை காணப்பட்டது.

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தினமும் மாலை, இரவு நேரங்களில் நகர் பகுதிகள் மட்டுமின்றி ஸ்ரீவில்லிபுத்தூர், செண்பகத் தோப்பு, பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக தற்போது அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட துவங்கி உள்ளது.

கடந்த 3 நாட்களாக செண்பகத் தோப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையின் காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் பேயனாற்றில் நீர்வரத்து ஏற்பட்டது. மம்சாபுரம் பகுதி கண்மாய்களுக்கும் நீர்வரத்து துவங்கியுள்ளது.

இதேபோல் வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அவ்வப்போது பெய்த மழையின் காரணமாக 2 அணைகளுக்கும் தண்ணீர் வரத்து ஏற்பட துவங்கியுள்ளது.

இதனால் பெரியாறு அணையில் தற்போது 31 அடி உயரத்திற்கும், கோவிலாறு அணியிலும் 26 அடி உயரத்திற்கும் தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு போல் தொடர்ந்து மழை பெய்து அனைத்து கண்மாய்கள் அணைகள் குளங்கள் நிரம்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் நெல், மக்காச்சோளம் சாகுபடியை துவக்கி உள்ளனர்.






      Dinamalar
      Follow us