sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறி வரும் ராஜபாளையம் அம்மா பூங்கா--

/

சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறி வரும் ராஜபாளையம் அம்மா பூங்கா--

சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறி வரும் ராஜபாளையம் அம்மா பூங்கா--

சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறி வரும் ராஜபாளையம் அம்மா பூங்கா--


ADDED : பிப் 15, 2024 04:40 AM

Google News

ADDED : பிப் 15, 2024 04:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே திருவள்ளுவர் நகரில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா உடற்பயிற்சி கூடம் பராமரிப்பின்றி சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாக மாறி வருகிறது.

ராஜபாளையம் முடங்கியார் ரோடு கிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகரில் இளைஞர்கள், மாணவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளவும் குழந்தைகள் விளையாடவும் பல லட்சம் செலவில் அம்மா பூங்கா மற்றும் விளையாட்டு உபகரங்களான ஊஞ்சல், சறுக்கு போன்ற விளையாட்டு சாதனங்களுடன் நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

பூங்காவை சுற்றியுள்ள தெருவில் பேவர் பிளாக் அமைக்கப்பட்டதால் சுற்றுச்சுவர் உயரம் குறைந்து சமூக விரோதிகளால் பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாக மாறி உள்ளதால் பெண்கள், குழந்தைகள் அச்சமின்றி உபயோகிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

உடற்பயிற்சி கூடத்திற்குள் தளவாட பொருட்கள் பாதுகாப்பு இன்றி சேதம் அடைந்துள்ளன. பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை உரிய முறையில் பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது இப்பகுதியினரின் எதிர்பார்ப்பு.






      Dinamalar
      Follow us