sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 திறந்தும் செயல்பாட்டிற்கு வராத ரேஷன் கடை கட்டடம்

/

 திறந்தும் செயல்பாட்டிற்கு வராத ரேஷன் கடை கட்டடம்

 திறந்தும் செயல்பாட்டிற்கு வராத ரேஷன் கடை கட்டடம்

 திறந்தும் செயல்பாட்டிற்கு வராத ரேஷன் கடை கட்டடம்


ADDED : நவ 21, 2025 04:42 AM

Google News

ADDED : நவ 21, 2025 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துார் அருகே நல்லான்செட்டிபட்டியில் அமைச்சர் திறந்து வைத்த பின்னரும் செயல்பாட்டிற்கு வராத புதிய ரேஷன் கடையால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

நல்லான் செட்டிபட்டி ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். தற்போது கூட்டுறவு சொசைட்டி கட்டடத்தில் உள்ள அறை ஒன்றில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையின் தரைதளம் சேதமடைந்த நிலையில் பல லட்சம் செலவில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. புதிய ரேஷன் கடை கட்டடத்தை கடந்த மாதம் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

அமைச்சர் திறந்து வைத்து பல நாட்கள் கடந்தும் புதிய ரேஷன் கடை இன்று வரை செயல்பாட்டிற்கு வரவில்லை. பழைய ரேஷன் கடைக்கு சென்று மக்கள் பொருட்கள் வாங்கி செல்கின்றனர். புதிய ரேஷன் கடை கட்டடத்திற்கு கடையை இடம் மாறுதல் செய்ய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us