ADDED : பிப் 18, 2024 12:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை,: அருப்புக்கோட்டை - பாலையம்பட்டி ரோட்டில் உள்ள கட்டட ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்.
பாலையம்பட்டி மதுரை ரோட்டில் இருபுறமும் ஓடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஓடை அருகில் தற்காலிகம் மற்றும் நிரந்தர ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
இந்நிலையில், நேற்று ஓடை பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கட்டடங்களை நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப் பொறியாளர் வெங்கடேஷ் குமார், உதவி பொறியாளர் தினேஷ்குமார், வருவாய் துறை, போலீசார் ஆகியோர் அகற்றினர்.-