sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அரசின் விற்பனை கூடங்களில் மாங்காய் ஏலமிட கோரிக்கை

/

அரசின் விற்பனை கூடங்களில் மாங்காய் ஏலமிட கோரிக்கை

அரசின் விற்பனை கூடங்களில் மாங்காய் ஏலமிட கோரிக்கை

அரசின் விற்பனை கூடங்களில் மாங்காய் ஏலமிட கோரிக்கை


ADDED : ஏப் 22, 2025 07:16 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : 'தமிழகத்தில் மாங்காய்களை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ஏலமிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில், விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருசில பகுதிகளிலும் மத்திய மாவட்டமான திண்டுக்கல், மேற்கு மாவட்டமான கோவை உடுமலைப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி, சேலம் போன்ற பகுதிகளிலும் மாங்காய்கள் அதிகம் விளைவிக்கப்படுகின்றன.

இவற்றில் மாங்காய் அதிகம் விளையும் சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் ஏலம் நடத்தி விற்கப்படுகிறது. ஆனால், மற்ற மாவட்டங்களில் பகுதி அளவில் சாகுபடி ஆவதால் சீசன் நேரங்களில் மட்டுமே விற்பனை நடக்கிறது.

இதனால், தென்மாவட்ட மா விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ஏலம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும், தனியார் ஏல மார்க்கெட்டுகளை நாடும் நிலை உள்ளது. அங்கும் குறைந்த விலைக்கு தான் மாங்காய் வாங்கப்படுகிறது. எனவே, அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலம் விடும் பட்சத்தில் மட்டுமே மாங்காய்களுக்கு நியாயமான விலை கிடைக்கும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us