sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரோடு, வாறுகால் சேதம் குடியிருப்புவாசிகள் அவதி

/

ரோடு, வாறுகால் சேதம் குடியிருப்புவாசிகள் அவதி

ரோடு, வாறுகால் சேதம் குடியிருப்புவாசிகள் அவதி

ரோடு, வாறுகால் சேதம் குடியிருப்புவாசிகள் அவதி


ADDED : பிப் 18, 2024 12:40 AM

Google News

ADDED : பிப் 18, 2024 12:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் முனீஸ்வரன் காலனியில் ரோடு வாறுகால் சேதம் அடைந்திருப்பதால் குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர்.

சிவகாசி அருகே திருத்தங்கல் முனீஸ்வரன் காலனியில் 4 ஆண்டுகளுக்கு முன்பு குழாய் பதிப்பதற்காக ரோடு தோண்டப்பட்டது. மீண்டும் சீரமைக்கப்படாததால் தற்போது ரோடு முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. இதில் டூவீலர் சென்று வருவது சிரமமாக உள்ளது.

ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியவில்லை. இந்தப் தெருவை கடந்து தான் அருகில் உள்ள எம்.ஜி.ஆர்., காலனி ,முருகன் காலனிக்கு மக்கள் செல்ல வேண்டும். ஆனால் ரோடு சேதத்தால் இப்பகுதியினர் சிரமப்படுகின்றனர்.

தவிர தெருவில் வாறுகாலும் சேதம் அடைந்துள்ளது. இதனால் கழிவு நீர் தெருவில் ஓடுகின்றது. மழைக் காலங்களில் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதார கேடும் ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் ரோடு வாறுகாலை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us