ADDED : மே 26, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டியில், ஆபரேஷன் சிந்துார் போரில் வெற்றி பெற்ற ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து, பா.ஜ.,வினர் தேசிய கொடி ஏந்தி ஊர்வலமாக சென்று மரியாதை செலுத்தினர்.
மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் ராஜபாண்டி, பாராளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளர் விஜய ரகுநாதன் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் பாலமுருகன், வேல் ராமலிங்கம், இளவரசன், பூமி, கணேசன், வீரபத்திரன், ஆறுமுகம், கோதண்டம், பால்சாமி, ராமசாமி, மணிக்குமார், முருகன், பழனிச்சாமி, சக்கையா, வடிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.