ADDED : நவ 02, 2025 03:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் லட்சுமிகாலனியைச் சேர்ந்தவர் பாலு 69.
இவர் ரயில்வேதுறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு நான்கு பெண் குழந்தைகள். இதில் மூவருக்கு திருமணம் முடிந்து விட்டது. ஒருவருக்கு திருமணம் முடியாததால் வீட்டில் இருக்கிறார். மேலும் பாலுவிற்கு கடந்த 6 மாதங்களாக வாய்ப்புண் பாதிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். இவர் தனது பெண்ணுக்கு அவரது தாய்மாமன் திருமணம் செய்து வைக்கும்படி கடிதம் எழுதி வைத்து விட்டு ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள வேப்பமரத்தில் நேற்று காலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

