sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

திருத்தங்கல் சத்யா நகரில் ரோடு, வாறுகால் சேதம்

/

திருத்தங்கல் சத்யா நகரில் ரோடு, வாறுகால் சேதம்

திருத்தங்கல் சத்யா நகரில் ரோடு, வாறுகால் சேதம்

திருத்தங்கல் சத்யா நகரில் ரோடு, வாறுகால் சேதம்


ADDED : ஜன 02, 2025 04:40 AM

Google News

ADDED : ஜன 02, 2025 04:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: திருத்தங்கல் சத்யா நகரில் ரோடு, வாறுகால் சேதமடைந்து இருப்பதால் குடியிருப்புவாசிகள் அதிருப்தியில் உள்ளனர்.

திருத்தங்கல் சத்யா நகரில் பத்திரகாளி அம்மன் கோயில் அருகே உள்ள தெருவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ரோடு, வாறுகால் போடப்பட்டது. இந்நிலையில் ரோடு முற்றிலும் சேதம் அடைந்து விட்டது. இதில் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. தவிர வாறுகாலும் சேதம் அடைந்திருப்பதால் கழிவு நீர் வெளியேற வழியின்றி ஒரே இடத்தில் தேங்கிவிட்டது.

இதனால் கொசு உற்பத்தியாகி அப்பகுதி மக்கள் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகின்றனர். மேலும் அருகில் உள்ள அரசு பள்ளி மாணவர்களும் துர்நாற்றத்தினாலும் தொற்று நோயினாலும் அவதிப்படுகின்றனர்.

ஏனெனில் பள்ளி மாணவர்கள் திறந்த நிலை சாக்கடையை கடந்து தான் பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேறி தெருவில் ஓடுகின்றது.






      Dinamalar
      Follow us