ADDED : ஜன 21, 2024 03:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: சாலை பாதுகாப்பு விதிகள் குறித்தும், வாகனங்களின் முகப்பு விளக்குகளுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
காரியாபட்டி எஸ்.ஐ., தலைமையில் போலீசார் ஹெல்மெட் அணிவதன்அவசியம், அணியாமல்வந்தால் விதிக்கப்படும் அபராதம், உயிர் இழப்பு ஏற்படுவதை தடுத்தல் குறித்து பேசினார்.
வாகனங்களின் முகப்பு விளக்குகளுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டாததால் எதிரே வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி பாதிக்கக்கூடும் என்பதை விளக்கி, கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
எஸ் ஐ.,கள் சர்மிளா பேகம், கலைச்செல்வன், டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் சரவணன், போலீசார் கலந்து கொண்டனர்.

