ADDED : ஜன 30, 2024 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை இக்ரா மெட்ரிக் பள்ளியில் நகர போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடந்தது.
இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் தலைமை வகித்தார். சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பற்றியும், விபத்துகளை தடுக்கும் முறைகள், வாகனங்களை பராமரித்தல், ஹெல்மெட் அணிதல் ஆகியவற்றை பற்றி கூறும் போது, தினமலர் நாளிதழில் வெளிவந்த இருசக்கர வாகன வாகன விபத்து செய்திகளை சுட்டிக்காட்டி ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றி விளக்கினார். பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.----