sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரோடு பணி தடுத்து நிறுத்தம்

/

ரோடு பணி தடுத்து நிறுத்தம்

ரோடு பணி தடுத்து நிறுத்தம்

ரோடு பணி தடுத்து நிறுத்தம்


ADDED : பிப் 09, 2024 04:10 AM

Google News

ADDED : பிப் 09, 2024 04:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சி 21-வது வார்டு பூபால்பட்டி வடக்கு தெருவில் ஏற்கனவே இருந்த சாலை உயரமாக உள்ளதால் மழை நேரங்களில் வீடுகளுக்குள் கழிவு நீர் புகுந்து சுகாதார கேடு ஏற்படுகிறது.

நேற்று காலை இப்பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்காக சாக்கடை ஒட்டிய பக்கவாட்டு பகுதி ஒரு அடி உயரத்திற்கு பலகை அமைக்கப்பட்டது. ஏற்கனவே உள்ள உயரத்துடன் இதுவும் சேர்ந்தால் வீடுகள் பள்ளங்களுக்குள் சென்று அதிக பாதிப்பு ஏற்படும் என கூறி தி.மு.க., கவுன்சிலர் ஞானவேலிடம் புகார் தெரிவித்தனர்.

ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தின்படி பணிகளை தொடர இருந்ததால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வேலையை நிறுத்தினர். தகவலறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.






      Dinamalar
      Follow us