sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு 55 பவுன் கொள்ளை

/

வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு 55 பவுன் கொள்ளை

வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு 55 பவுன் கொள்ளை

வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு 55 பவுன் கொள்ளை


ADDED : பிப் 25, 2024 02:46 AM

Google News

ADDED : பிப் 25, 2024 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கணவன், மனைவி, குழந்தைகளை கட்டிப் போட்டு 55 பவுன் தங்க நகைகள், ரூ.55 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

ராஜபாளையம் ஆண்டாள்புரம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் முருகானந்தம். நியூட்ரிஷன் நிபுணர். மனைவி இந்துமதி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு இவரது வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்து அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களை காட்டி மிரட்டி அனைவரையும் கட்டி போட்டுள்ளனர். பீரோவில் இருந்த 55 பவுன் தங்க நகை, ரூ. 55 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து கண்காணிப்பு கேமராவை சேதப் படுத்தி, அலைபேசிகளையும் பறித்து சென்றது.

ராஜபாளையம் டி.எஸ்.பி., நாகராஜன், ஸ்ரீவில்லிபுத்துார் டி.எஸ்.பி., முகேஷ் ஜெயக்குமார், கூடுதல் கண்காணிப்பாளர் சூரியமூர்த்தி மற்றும் போலீசார் ஆய்வு செய்து அக்கம் பக்கத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us