ADDED : ஜன 29, 2025 07:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் ரோட்டரி கிளப் ஆப் அருப்புக்கோட்டை துவக்க விழா நடந்தது.
மாவட்ட ஆளுநர் மீரான் கான் சலீம் தலைமை வகித்து புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்.
கோவில்பட்டி ரோட்டரி கிளப் துணை ஆளுநர் ஜெயபிரகாஷ் நாராயணசாமி முன்னிலை வகித்தார்.
அருப்புக்கோட்டை தலைவர் கனகவேல் வரவேற்றார். செயலாளர் முத்துவேல், பொருளாளர் இளங்கோ, மாவட்ட பொது செயலாளர் பிரபாகரன், தொடர்புச் செயலாளர் ஆறுமுகச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ., விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.