sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தாய்கோ வங்கியில் ரூ.46 லட்சம் மோசடி; வங்கி அலுவலர்கள் உட்பட 6 பேருக்கு சிறை

/

தாய்கோ வங்கியில் ரூ.46 லட்சம் மோசடி; வங்கி அலுவலர்கள் உட்பட 6 பேருக்கு சிறை

தாய்கோ வங்கியில் ரூ.46 லட்சம் மோசடி; வங்கி அலுவலர்கள் உட்பட 6 பேருக்கு சிறை

தாய்கோ வங்கியில் ரூ.46 லட்சம் மோசடி; வங்கி அலுவலர்கள் உட்பட 6 பேருக்கு சிறை


ADDED : அக் 26, 2024 07:16 AM

Google News

ADDED : அக் 26, 2024 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் சாத்துார் தாய்கோ வங்கியில், போலியான ஆவணங்களை உருவாக்கி ரூ. 46 லட்சம் தனிநபர் கடன் வழங்கிய வழக்கில், ஓய்வு பெற்ற வங்கி மேலாளர், கணக்கர், தலைமை ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறையும், மேலும் 3 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தும் ஸ்ரீவில்லிபுத்துார் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2001 முதல் 2004 வரை சாத்துார் தாய்கோ வங்கியில் (தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி) தனிநபர் கடன்கள் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரில் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரித்தில், போலியான ஆவணங்களை உருவாக்கி ரூ.46 லட்சம் வரை கடன்கள் வழங்கியது தெரிந்தது.

இதனையடுத்து வங்கி மேலாளர் ராமச்சந்திரன், கணக்கர் குலாம் அகமது, உதவியாளர் சாரதா, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் முருகானந்தம், ஜோதி சுந்தரி, அரசு போக்குவரத்து கழக ஊழியர் பாலசுப்ரமணியன், ஆறுமுகம், முத்துராமன், முரளிதரன், ராம்குமார், சரவணன், முத்துச்சாமி, மாரியம்மாள், கற்பகவல்லி ஆகிய 14 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 2008ல் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் 16 ஆண்டாக வழக்கு விசாரணை நடந்தது. வழக்கு விசாரணை நடந்த காலத்தில் குற்றம் சாட்டப்பட்ட முருகானந்தம், பாலசுப்ரமணியன், ஆறுமுகம், சரவணன் இறந்து விட்டனர்.

இதில் வங்கி மேலாளர் ராமச்சந்திரன், கணக்கர் குலாம் அகமது, ஓய்வு தலைமை ஆசிரியை ஜோதி சுந்தரி ஆகியோருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 35 ஆயிரம் அபராதம் விதித்தும், முரளிதரன், ராம்குமார், முத்துசாமி ஆகியோருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ 35 ஆயிரம் அபராதம் விதித்தும், சாரதா, முத்துராமன், மாரியம்மாள், கற்பகவல்லி ஆகியோரை விடுதலை செய்தும் நீதிபதி பிரித்தா நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ராஜகுமாரி ஆஜரானார்.






      Dinamalar
      Follow us