sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சாத்துாரில் வங்கி வாசலில் டூவீலரில் வைத்த ரூ.6.47 லட்சம் திருட்டு

/

சாத்துாரில் வங்கி வாசலில் டூவீலரில் வைத்த ரூ.6.47 லட்சம் திருட்டு

சாத்துாரில் வங்கி வாசலில் டூவீலரில் வைத்த ரூ.6.47 லட்சம் திருட்டு

சாத்துாரில் வங்கி வாசலில் டூவீலரில் வைத்த ரூ.6.47 லட்சம் திருட்டு


ADDED : ஆக 20, 2025 07:23 AM

Google News

ADDED : ஆக 20, 2025 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்; சாத்துாரில் எஸ்.பி.ஐ. வங்கி வாசலில் டூவீலரில் வைத்த ரூ.6.47 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

துாத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தை சேர்ந்தவர் சிதம்பரம், 47. சென்னை கல்பாக்கத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். சாத்துார் ஏ.ராமலிங்கபுரத்தில் தனது மாமியார் வீட்டிற்கு குடும்பத்துடன் வந்துள்ளார்.

நேற்று மதியம் 12:00 மணிக்கு இருசக்கர வாகனத்தில் சாத்துார் எஸ்.பி.ஐ. வங்கிக்கு வந்த அவர் அவரது கணக்கில் இருந்து ரூ 6.47 லட்சம் பணத்தை எடுத்துள்ளார். இதன் பின்னர் 12:40 மணிக்கு வங்கிக்கு வெளியே வந்த அவர் டூ வீலரின் சீட் கவரை திறந்து பாக்சில் ரூ 6.47 லட்சத்தை வைத்து விட்டு அருகில் உள்ள டீ கடைக்கு சென்று டீ சாப்பிட்டு விட்டு பின்னர் அங்கிருந்த தள்ளு வண்டி பழக்கடையில் பழங்கள் வாங்கி உள்ளார்.

பழங்களை வைக்க டூ வீலர் சீட் கவரை திறந்த போது அதிலிருந்த ரூ 6.47 லட்சத்தை காணவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் டூவீலரில் விரல் ரேகைகளை பதிவு செய்தனர். வங்கியிலும் கடைகளிலும் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு பணத்தை திருடிய மர்ம நபர்களை சாத்துார் போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us