sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சாத்துார் பெத்து ரெட்டிபட்டியில் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதி

/

சாத்துார் பெத்து ரெட்டிபட்டியில் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதி

சாத்துார் பெத்து ரெட்டிபட்டியில் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதி

சாத்துார் பெத்து ரெட்டிபட்டியில் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதி


ADDED : பிப் 05, 2025 11:58 PM

Google News

ADDED : பிப் 05, 2025 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்; சாத்துார் அருகே பெத்து ரெட்டிபட்டியில்குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

பெத்து ரெட்டிபட்டி ஊராட்சியில் பெத்து ரெட்டிபட்டி, சின்னத்தம்பிபுரம், வடமலாபுரம், ஆகிய கிராமங்கள் உள்ளன. பெத்து ரெட்டிபட்டியில் மூன்று மேல்நிலை குடிநீர் தொட்டியின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

உள்ளூர் குடிநீர் ஆதாரத்தை பயன்படுத்தி ஊராட்சியில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் கடந்த ஒரு மாதமாக மோட்டார் பழுது காரணமாக ஊராட்சியில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.

இதனால் மக்கள் வேறு வழி இன்றி வண்டிகளில் விற்பனை செய்யப்படும் மினரல் வாட்டரை விலைக்கு வாங்கி குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.

உப்புத் தண்ணீரை பிடித்து மக்கள் பாத்திரம் துலக்கவும் குளிக்கவும் பயன்படுத்தி வருகின்றனர். மோட்டார் பழுதை விரைவில் சரி செய்து சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us