sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கடையநல்லுார் அருகே தண்டவாளத்தில் மீண்டும் கல் பொதிகை ரயிலை கவிழ்க்க சதியா

/

கடையநல்லுார் அருகே தண்டவாளத்தில் மீண்டும் கல் பொதிகை ரயிலை கவிழ்க்க சதியா

கடையநல்லுார் அருகே தண்டவாளத்தில் மீண்டும் கல் பொதிகை ரயிலை கவிழ்க்க சதியா

கடையநல்லுார் அருகே தண்டவாளத்தில் மீண்டும் கல் பொதிகை ரயிலை கவிழ்க்க சதியா

1


ADDED : நவ 02, 2024 02:51 AM

Google News

ADDED : நவ 02, 2024 02:51 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்:தென்காசி மாவட்டம் கடையநல்லுார் அருகே ரயில்வே தண்டவாளத்தில் மீண்டும் கல் வைத்த சம்பவத்தால், பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி நடந்ததா என ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

செப். 26 ல் தென்காசி மாவட்டம் செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. மாலை 6: 50 மணிக்கு கடையநல்லுார் ரயில்வே ஸ்டேஷன் அருகே சங்கனாப்பேரி பகுதியில் ரயில் சென்ற போது தண்டவாளத்தில் பெரிய கல் வைக்கப்பட்டிருந்த சம்பவம் நடந்தது.

இதுகுறித்து ரயில்வே போலீஸ் சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரித்ததில் சம்பவ பகுதி அருகே ஒரு குவாரியில் பணியாற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பல்சிங் பகேல் 21, ஈஸ்வர் மைடியர் 23, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ரீல்ஸ் மோகத்தில் தண்டவாளத்தில் கல் வைத்து வீடியோ எடுத்து பின்னர் அதனை அழித்தது தெரிய வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கடையநல்லுார் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஒரு கிலோ மீட்டர் துாரத்தில் போக நல்லுார் என்ற இடத்தில் மீண்டும் 10 கிலோ எடையுள்ள ஒரு கல் வைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின் டிரைவர் ரயிலை நிறுத்தி கல்லை அப்புறப்படுத்தி மீண்டும் ரயிலை இயக்கினார். பின்னர் ரயில்வே அதிகாரிகளுக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அங்கு வந்து ரயில்வே அதிகாரிகள், போலீசார் சோதனை நடத்தினர். நேற்று சம்பவப் பகுதி முழுவதும் ஆய்வு செய்து சுற்றியுள்ள கிராமங்களில் விசாரித்தனர்.

35 நாள் இடைவெளியில் ஏற்கனவே கல் வைக்கப்பட்ட இடத்தில் இருந்து சில கிலோ மீட்டர் துாரத்தில் மீண்டும் கல் வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்பயணிக்கும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி நடந்ததா என விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us