sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

எஸ்.பி., அறிக்கை சமர்ப்பிக்க எஸ்.சி., ஆணையம் உத்தரவு

/

எஸ்.பி., அறிக்கை சமர்ப்பிக்க எஸ்.சி., ஆணையம் உத்தரவு

எஸ்.பி., அறிக்கை சமர்ப்பிக்க எஸ்.சி., ஆணையம் உத்தரவு

எஸ்.பி., அறிக்கை சமர்ப்பிக்க எஸ்.சி., ஆணையம் உத்தரவு


ADDED : நவ 16, 2024 02:14 AM

Google News

ADDED : நவ 16, 2024 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு கூமாபட்டியில் தலித் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் எஸ்.பி., அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய எஸ்.சி., ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வத்திராயிருப்பு கூமாபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் செப்., 30ல் கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டனர். அக்., 1ல் கலவரம், ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 250க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதியப்பட்டது.

இந்நிலையில் தலித் விடுதலை இயக்கம் மாநில தலைவர் கருப்பையா தேசிய எஸ்.சி., ஆணையத்திடம் கலவரம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தலித்துகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெறவும், முறையான விசாரணை நடத்த கோரியும் மனு அளித்திருந்தார்.

நேற்று முன்தினம் தேசிய எஸ்.சி., ஆணைய இயக்குனர் ரவிவர்மன், கருப்பையாவின் மனுவை ஏற்று விருதுநகர் மாவட்ட எஸ்.பி.,யிடம் முத்துக்குமார் கொலை வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 15 நாட்களுக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us