ஸ்ரீவில்லிபுத்தூர : மல்லி யஷஸ் ஐ.சி.எஸ்.இ. பள்ளியில் எட்டாவது ஆண்டு விழா நடந்தது.
சேர்மன் ரமேஷ் தலைமை வகித்தார். தாளாளர் உஷா முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் லட்சுமி பிரியா ஆண்டறிக்கை மற்றும் வரவேற்றார். விழாவில் வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகரன், டாக்டர் ரேவதி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினர். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
சாத்துார்
சாத்துார் எஸ்.ஆர்.நாயுடுநகர் பாரத் மழலையர் மற்றும் துவக்க பள்ளியில் 36 வது ஆண்டு விழா நடந்தது.
டாக்டர் பிச்சுமணி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை ஆதிலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். தாளாளர் லிங்கசாமி, பள்ளி ஆலோசகர் சந்திரா, விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது மாணவர்கள் பெற்றோர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

