sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பள்ளி கல்லுாரி செய்திகள்

/

பள்ளி கல்லுாரி செய்திகள்

பள்ளி கல்லுாரி செய்திகள்

பள்ளி கல்லுாரி செய்திகள்


ADDED : ஜன 02, 2025 11:57 PM

Google News

ADDED : ஜன 02, 2025 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கருத்தரங்கம்


சிவகாசி: சிவகாசி காளீஸ்வரி கல்லுாரி முதுநிலை வணிகவியல் துறை சார்பில் சந்தைப்படுத்துதலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை செயல்படுத்துதல் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்தார். கல்லுாரி மாணவி பவித்ரா வரவேற்றார். துறை தலைவர் அமுதா ராணி வாழ்த்தினார். பெங்களூரு செயின்ட் பிளாரெட் கல்லுாரி தேர்வு கட்டுப்பாட்டாளர் வணிகவியல் ஆராய்ச்சி மையம் தலைவர் சிவ முருகன் பேசினார். 62 மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர். மாணவி மகாலட்சுமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை முதுகலை வணிகவியல் துறை சங்க பொறுப்பாளர் சதீஷ்குமார் செய்தார்.

தேசிய நுகர்வோர் தினம்


சிவகாசி: சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர்கல்லுாரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில் தேசிய நுகர்வோர் தினம் கொண்டாடப்பட்டது. கல்லுாரி தலைவர்திலகவதி, செயலர் அருணா புரவலர்களாக வழி நடத்தினர். கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் தலைமை வகித்தார்.

குடிமக்கள் நுகர்வோர் மற்றும் திட்ட அலுவலர் மேகலாதேவி வரவேற்றார். கல்லுாரி சமூக சேவை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் விஜயபிரியா கருத்துரை வழங்கினார். மாவட்ட வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி அனிதா பேசினார். குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில் மாணவர்கள், மக்களுக்கு ஏற்படுத்திய விழிப்புணர்வு நிகழ்வு காணொளி காட்சியாக திரையிடப்பட்டது.






      Dinamalar
      Follow us