
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் தின விழா கண்காட்சி நடந்தது.
மானேஜிங் போர்டின் பொருளாளர் ரத்தினவேல் தலைமை வகித்து துவங்கி வைத்தார். செயலாளர் முரளிதரன் முன்னிலை வகித்தார். இந்த அறிவியல் கண்காட்சியில் பல்வேறு துறைகளை சேர்ந்த 743 மாணவர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டது. பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பார்வையிட்டனர்.
வெற்றி மாணவர்களுக்கு மானேஜிங் போர்டின் சின்னக்கண் பரிசு வழங்கினார். ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் முருகேசன் செய்தார்.