/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருத்தங்கல் ரோட்டில் தேங்கியுள்ள கழிவுநீர்
/
திருத்தங்கல் ரோட்டில் தேங்கியுள்ள கழிவுநீர்
ADDED : ஆக 07, 2025 11:16 PM

சிவகாசி: சிவகாசி- - திருத்தங்கல் ரோட்டில் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கழிவு நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றன.
சிவகாசி வேலாயுதரஸ்தாரோடு விலக்கிலிருந்து திருத்தங்கல் செல்லும் ரோட்டில் கழிவுநீர் மழை நீர் வெளியேறுவதற்காக வாறுகால் உள்ளது. ஆனால் இந்த வாறுகால் மண்மேவி முழுமையாக அடைபட்டுள்ளது. இதனால் கழிவு நீர் வெளியேற வழி இன்றி ஒரே இடத்தில் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதுமே துர்நாற்றம் ஏற்படுகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேறி ரோட்டில் ஓடுகின்றது. எனவே இப்பகுதியில் வாறுகாலை துார்வாரி கழிவுநீர் வெளியேறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.