sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரோட்டில் தேங்கிய கழிவு நீர் வாகன ஓட்டிகள் அவதி

/

ரோட்டில் தேங்கிய கழிவு நீர் வாகன ஓட்டிகள் அவதி

ரோட்டில் தேங்கிய கழிவு நீர் வாகன ஓட்டிகள் அவதி

ரோட்டில் தேங்கிய கழிவு நீர் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : அக் 10, 2024 05:36 AM

Google News

ADDED : அக் 10, 2024 05:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசி திருத்தங்கல் மெயின் ரோட்டில் சேதமடைந்த வாறுகாலால் மழைக் காலங்களில், கழிவு நீர் மழைநீர் வெளியேறி ரோட்டில் ஓடி மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.

சிவகாசி வேலாயுதரஸ்தா விலக்கில் இருந்து திருத்தங்கல் செல்லும் மெயின் ரோட்டில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வாறுகால் அமைக்கப்பட்டது. மழைக்காலங்களில் மழைநீர் வாறுகால் வழியாக வெளியேறி அருகிலுள்ள கண்மாய்க்கு சென்று விடும். தற்போது இந்த வாறுகால் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. மேலும் முட்புதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இதனால் கழிவுநீர் வெளியேற வழியின்றி ஒரே இடத்தில் தேங்கியுள்ளது. துர்நாற்றம் ஏற்படுவதால் இப்பகுதியை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மழைக்காலங்களில் மழை நீரும் வெளியேற வழி இன்றி கழிவுநீரோடு மெயின் ரோட்டில் ஓடுகின்றது. சிறிய மழை பெய்தாலும் முழங்கால் அளவிற்கு ரோட்டில் ஓடும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதிப்பட நேரிடுகிறது.

எனவே உடனடியாக இப்பகுதியில் வாறுகாலை சீரமைத்து கழிவு நீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us