ADDED : ஜன 03, 2025 12:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி அன்பு மாடல் நகரில் ஷீரடி சாய்பாபா கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு ஆராதனை, ஆரத்தி நிகழ்ச்சிகள் நடந்தன.
பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் சிவ தாண்டவம், பரதநாட்டியம் உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள், உபகரணங்கள் வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை சாய்ராம் டிரஸ்ட் நிறுவனத் தலைவர் சுந்தரமூர்த்தி, நிர்வாகத்தினர் செய்தனர்.

