/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நல்லதங்காள் கோவிலில் கொள்ளை; அம்மன் சிலை உடைப்பால் அதிர்ச்சி
/
நல்லதங்காள் கோவிலில் கொள்ளை; அம்மன் சிலை உடைப்பால் அதிர்ச்சி
நல்லதங்காள் கோவிலில் கொள்ளை; அம்மன் சிலை உடைப்பால் அதிர்ச்சி
நல்லதங்காள் கோவிலில் கொள்ளை; அம்மன் சிலை உடைப்பால் அதிர்ச்சி
UPDATED : ஜன 27, 2025 07:13 AM
ADDED : ஜன 27, 2025 03:59 AM

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அர்ச்சுனாபுரம் நல்லதங்காள் கோவிலில், அம்மன் சிலையை உடைத்து அடியில் இருந்த தங்கம், வெள்ளி, உண்டியல் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அர்ச்சுனாபுரத்தில், 15ம் நுாற்றாண்டில் வாழ்ந்த ராமலிங்க சேதுபதிக்கு நல்லதம்பி, நல்லதங்காள் என, இரு குழந்தைகள். இதில், நல்லதங்காளை மானாமதுரையைச் சேர்ந்த காசிராஜனுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். அவருக்கு ஏழு குழந்தைகள் பிறந்தனர்.
வறுமையால் சொந்த ஊர் வந்த நல்லதங்காளை, அண்ணன் நல்லதம்பியின் மனைவி அலட்சியப்படுத்தினார். வேதனையடைந்த நல்லதங்காள் ஏழு குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
அங்கு அப்பகுதியினர் நல்லதங்காளுக்கு கோவில் அமைத்து வணங்கி வருகின்றனர்.
நேற்று காலை கோவிலை திறக்க பூஜாரி தங்கமணி வந்தபோது, முன் மண்டப கிரில் கம்பிகள் வளைக்கப்பட்டும், கருவறையில் இருந்த அம்மன் சிலை உடைந்தும் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தகவலறிந்த போலீசார் விசாரணை நடத்தினர். உண்டியலில் அதிகளவில் பணம் கிடைக்கும் என, மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
எதிர்பார்த்த பணம் கிடைக்காததால், கருவறை அம்மன்  சிலையை கடப்பாரையால் பெயர்த்து, அடியில் இருந்த தங்கம், வெள்ளி பொருட்களை திருடி சென்றுள்ளனர். இதில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி கிராமத்தினர், கோவில் முன் திரண்டனர்.

