ADDED : ஏப் 14, 2025 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்ட மேல் மருவத்துார் ஆதி பராசக்தி ஆன்மிக இயக்கம், மாவட்ட சித்த மருத்துவ கல்லுாரி சார்பில் இலவச சித்த மருத்துவ முகாம் நடந்தது.
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் நடந்த முகாமிற்கு மன்றத்தின் மாவட்ட நிர்வாக குழு தலைவர் பத்மநாபன் தலைமை விகித்தார்.
பொருளாளர் அருள் பிரகாஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் கீதா தலைமையில் பெண்கள், முதியோர், குழந்தைகள், பொது, தோல் நோய் பிரிவு மருத்துவ குழுவினர் பயனாளிகளுக்கு ஆலோசனைகள், மருந்துகள் வழங்கினர்.
ஏற்பாடுகளை ராஜபாளையம் வட்ட துணைத்தலைவர் வெங்கடேசன் தலைமையில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற உறுப்பினர்கள் செய்தனர்.