/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பஸ் வசதி கேட்டு கையெழுத்து இயக்கம்
/
பஸ் வசதி கேட்டு கையெழுத்து இயக்கம்
ADDED : நவ 06, 2024 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி : திருச்சுழி திருச்சுழி அருகே பெரிய சோழாண்டி கிராமத்திற்கு பஸ் வசதி கேட்டு நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தில் பள்ளி மாணவர்கள், மக்கள் பங்கேற்றனர்.
இந்திய கம்யூ., சார்பாக பஸ் வசதி கேட்டு நடந்த கையெழுத்து இயக்கத்திற்கு திருச்சுழி ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமை வகித்தார். விவசாய சங்க மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் முன்னிலை வகித்தார்.
இதில் ஊர் மக்கள், பெண்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு மனுவில் கையெழுத்து இட்டனர். பின்னர் அருப்புக்கோட்டை அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது.

