UPDATED : ஆக 02, 2026 10:06 PM
ADDED : ஆக 02, 2026 08:00 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் கணிணி பயன்பாட்டியல் துறை சார்பில் எக்ஸ்பிகா 2026 எனும் தலைப்பில் இரண்டு நாட்கள் மென்பொருள் கண்காட்சி நடந்தது.
துவக்க விழாவில் கணிணி பயன்பாட்டியல் துறைத் தலைவர் ராஜ்குமார் வரவேற்றார். கல்லுாரி தலைவர் சம்பத்குமார் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., செல்வம் கண்காட்சியை துவக்கி வைத்துப் பேசினார். இதில் செயற்கை நுண்ணறிவின் மூலம் மருந்து பொருட்கள் தயாரிக்கும் செயல்முறை, முகத்தை வைத்து அடையாளம் காணும் வழிமுறைகள், வருகைப்பதிவு செய்தல், பொருட்களின் இணையத்தின் பயன்பாடுகள் செயல் முறை விளக்கங்களை மாணவர்கள் காட்சிப்படுத்தி இருந்தனர்.
