ADDED : டிச 24, 2024 04:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் கூறியதாவது: வீர விருது பெற்றோர், போரில் உயிர் தியாகம் செய்தோரை சார்ந்தோர், முன்னாள் படைவீரர்கள், படையில் பணிபுரிவோரை சார்ந்தோருக்கான குறைதீர் கூட்டம் இன்று(டிச. 24) நடக்க உள்ளது.
மாவட்டத்தைச் சார்ந்த வீர விருது பெற்றோர், போரில் உயிர்தியாகம் செய்தோரைசார்ந்தோர், முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர் குறைகள் ஏதும் இருப்பின் தங்களது அடையாள அட்டை நகலுடன் தங்கள் குறைகள் குறித்த மனுவுடன் (இரட்டை பிரதிகளில்) கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பம் வழங்கி பயனடைலாம், என்றார்.