ADDED : ஜன 19, 2025 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி ரெங்கபாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தவம் 50. இவர் தனது உடன் பிறந்த தங்கையின் மகனான செல்வகுமாரிடம் மூன்று மாதத்திற்கு முன்பு தனது இடத்தின் பத்திரத்தை கொடுத்து ரூ. ஒரு லட்சம் கடனாக வாங்கி இருந்தார்.
ஒரு வாரத்தில் பணத்தை திருப்பிக் கொடுத்து, பத்திரத்தை கேட்டார். பலமுறை பத்திரத்தை கேட்டும் தராத செல்வகுமார் அவரது சகோதரர் விஜய் ஆகியோர் தவத்தை தகாத வார்த்தை பேசி அடித்தனர். எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.----

