ADDED : செப் 17, 2025 03:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் புல்வெளி விளையாட்டு மையத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்.
அருப்புக்கோட்டை காமராஜர் நகரில் சாமுராய் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் சார்பாக புல்வெளியில் கிரிக்கெட் கால்பந்து வாலிபால் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். சி.எஸ்.ஐ., இம்மானுவேல் சர்ச் பாஸ்டர் ரஞ்சன் கனகமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் நகராட்சி தலைவர் சிவப்பிரகாசம், நகராட்சி துணைத் தலைவர் பழனிச்சாமி, தி.மு.க., நகரச் செயலாளர் மணி கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அகாடமி நிர்வாக இயக்குனர்கள் ஹர்ஷபாலன், ஜெப்ரி வசந்தராஜ் செய்தனர்.