sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விளையாட்டு ஆசிரியர் காலி பணியிடங்கள் மைதானம் இல்லாத அரசு பள்ளிகளால் தவிப்பு

/

விளையாட்டு ஆசிரியர் காலி பணியிடங்கள் மைதானம் இல்லாத அரசு பள்ளிகளால் தவிப்பு

விளையாட்டு ஆசிரியர் காலி பணியிடங்கள் மைதானம் இல்லாத அரசு பள்ளிகளால் தவிப்பு

விளையாட்டு ஆசிரியர் காலி பணியிடங்கள் மைதானம் இல்லாத அரசு பள்ளிகளால் தவிப்பு


ADDED : அக் 01, 2024 04:33 AM

Google News

ADDED : அக் 01, 2024 04:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: விருதுநகர் மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளதால் விளையாட்டு போட்டிகளுக்கு மாணவர்களை தயார் படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. பெரும்பாலன பள்ளிகளில் விளையாட்டு மைதானம் இல்லாதால், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் 91 உயர்நிலை, 99 மேல்நிலை என 190 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகிறது. இதில் உயர்நிலை பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களும், மேல்நிலை பள்ளிகளிலும் உடற்கல்வி இயக்குநர்களும் பணியில் உள்ளனர்.

மாணவர்களின் விளையாட்டு திறனை வெளிப்படுத்த ஆண்டுதோறும் வட்டார, மாவட்ட, மண்டல ,மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இதுதவிர கலைத்திருவிழா போட்டிகள், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் 190 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 80 சதவீதம் பள்ளிகளில் விளையாட்டு மைதானம், உபகரணங்கள் இல்லாததால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

மேலும் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதால் போட்டிகளுக்கு மாணவர்களை தயார்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. மைதானம், உபகரணங்கள் இல்லாததால் கபடி, கோ-கோ, சிலம்பம் உள்ளிட்ட சில போட்டிகளுக்கு மட்டுமே மாணவர்களை தயார் படுத்த முடிகிறது என உடற்கல்வி ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தனியார் பள்ளிகளில் சிறு வயதில் இருந்தே மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளித்து, போட்டிகளுக்கு தயார்படுத்தி வருகின்றனர். ஆனால் அரசு நடுநிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், உயர்நிலைப்பள்ளிக்கு வந்த பின்னரே முறையான பயிற்சி கிடைப்பதால் போட்டிகளில் வெற்றி பெற சிரமப்படுகின்றனர். நடுநிலை பள்ளியில் வாரத்தில் இரு நாட்கள் விளையாட்டு வகுப்பு இருந்தும் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாததால் எந்த பயனும் இல்லாத சூழல் நிலவுகிறது.

தற்போது பள்ளி கல்வித்துறை சார்பில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்கள் மற்றும் போட்டிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாணவர்களை தயார் படுத்தும் வகையில், நடுநிலை பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் இயக்குநர் சங்க மாநில துணை தலைவர் பிச்சை கூறுகையில், உயர்நிலைப்பள்ளிகளில் 250 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியரும், கூடுதலாக உள்ள 300 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் வீதம் நியமிக்கப்பட வேண்டும். மேல்நிலை பள்ளிகளில் 400 மாணவர்களுக்கு மேல் இருந்தால் உடற்கல்வி இயக்குநர் நியமிக்க வேண்டும்.

ஆனால் தற்போது 700 மாணவர்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே உடற்கல்வி இயக்குநர் நியமனம் என விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதால் மேல்நிலைப்பள்ளிகளில் ஒரு உடற்கல்வி ஆசிரியர் மட்டுமே பணிபுரியும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் பள்ளிகளில் விளையாட்டு மைதானம், உபகரணங்கள் இல்லாதது மற்றும் காலிப்பணியிடங்களால் பள்ளி கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் பல்வேறு போட்டிகளுக்கு மாணவர்களை தயார் படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. உடற்கல்வி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.






      Dinamalar
      Follow us