sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சீனிவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

/

சீனிவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

சீனிவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

சீனிவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்


ADDED : ஜூலை 15, 2025 03:09 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 03:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் 36 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று அதிகாலை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தென் திருப்பதி என அழைக்கப்படும் இக்கோயிலில் 1989ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. 36 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது கோயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

நேற்று அதிகாலை 4:45 மணிக்கு புண்ணியாக வாசனம், கால சாந்தி பூஜை, அக்னி ஆராதனம், மூர்த்தி ஹோமங்கள், விசேஷ பூர்ணாஹூதி நடந்தது. காலை 5:15 மணிக்கு மேல் கடம் புறப்பாடு ஆலய ப்ரதக்ஷணம் நடந்தது.

அதிகாலை 5:50 மணிக்கு அறங்காவலர் குழு தலைவர் வெங்கட் ராமராஜா கொடியசைக்க, மூலஸ்தான விமானம், ராமர் பாத விமானம், சால கோபுரங்களுக்கு முத்துபட்டர் உட்பட பல்வேறு பட்டர்கள் வேத மந்திரங்கள் முழங்க, கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். அப்போது திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோபாலா கோஷம் முழங்கி வழிபட்டனர்.

விழாவில் அறங்காவலர்கள், எம்.எல்.ஏ. மான்ராஜ், செயல் அலுவலர் சக்கரை அம்மாள், பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். டி.எஸ்.பி ராஜா தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us