sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தெரு நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் பயன்பாட்டிற்கு வந்தது

/

தெரு நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் பயன்பாட்டிற்கு வந்தது

தெரு நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் பயன்பாட்டிற்கு வந்தது

தெரு நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் பயன்பாட்டிற்கு வந்தது


ADDED : அக் 04, 2025 03:22 AM

Google News

ADDED : அக் 04, 2025 03:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசியில் தெரு நாய் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

சிவகாசியில் தேரடி பகுதி, மாடவீதி ரத வீதிகள் , பழைய விருதுநகர் ரோடு பஜார் பகுதி விளாம்பட்டி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் நாய்கள் நடமாடுகின்றன. இவைகள் மக்களைவிரட்டிக் கடிக்கின்றது.

சிவகாசி விஸ்வநத்தம் ரோட்டில் 10 ஆண்டுகளுக்கு முன்பு தெரு நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இந்த கருத்தடை அறுவை சிகிச்சை மையம் செயல்படாததால் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனால் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தை செயல்படுத்த மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று முதல்

நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் பயன்பாட்டிற்கு வந்தது.

மேயர் சங்கீதா, துணை மேயர் விக்னேஷ் பிரியா, கமிஷனர் சரவணன் துவக்கி வைத்தனர்.

இங்கு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டும், கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டும் துவக்கப்பட்டது. சிவகாசி அரசு கால்நடை மருத்துவமனை உதவி இயக்குனர் ஷர்மிளா தலைமையில் உதவி டாக்டர்கள் ராஜா, அனுசியா குழுவினர் நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை செய்தனர்.






      Dinamalar
      Follow us