ADDED : செப் 25, 2024 03:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை ரமணாஸ் கல்வியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எட்., படிக்கும் மாணவிகளின் துவக்க விழா நடந்தது.
கல்லூரி சேர்மன் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கல்லூரி செயலர் சங்கரநாராயணன் வரவேற்றார். கலைக் கல்லூரி செயலர் இளங்கோவன் ஆசிரியர்களின் பண்புகள் குறித்து பேசினார். முதல்வர் ராஜேந்திரன் பாடத்திட்டங்கள், மாணவிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து பேசினார். போக்குவரத்து செயலர் விக்னேஷ் கலை கல்லூரி முதல்வர் தில்லை நடராஜன் கலந்து கொண்டனர். துணை முதல்வர் கலைச்செல்வி நன்றி கூறினார்.