sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மாணவர்கள் தர்ணா

/

மாணவர்கள் தர்ணா

மாணவர்கள் தர்ணா

மாணவர்கள் தர்ணா


ADDED : செப் 26, 2024 04:32 AM

Google News

ADDED : செப் 26, 2024 04:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரிக்குடி: திருச்சுழி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

நரிக்குடி மேலேந்தல் அருகே அரசு கலை, அறிவியல் கல்லூரி ரூ. 16 கோடியே 46 லட்சம் செலவில் கட்டப்பட்டு, பிப்.27ல் திறக்கப்பட்டது.

இங்கு அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அத்துடன் சரிவர இருக்கை வசதி இல்லாததால் மாணவர்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர்.

தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டி கல்லுாரி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

நரிக்குடி போலீசார், பேராசிரியர்கள் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு, வகுப்பறைக்கு சென்றனர்.






      Dinamalar
      Follow us