sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மாணவர்கள் நம்பகத்தன்மை, நேர்மை நேர மேலாண்மையை வளர்க்க வேண்டும்

/

மாணவர்கள் நம்பகத்தன்மை, நேர்மை நேர மேலாண்மையை வளர்க்க வேண்டும்

மாணவர்கள் நம்பகத்தன்மை, நேர்மை நேர மேலாண்மையை வளர்க்க வேண்டும்

மாணவர்கள் நம்பகத்தன்மை, நேர்மை நேர மேலாண்மையை வளர்க்க வேண்டும்


ADDED : நவ 24, 2024 07:10 AM

Google News

ADDED : நவ 24, 2024 07:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : நம்பகத்தன்மை, நேர்மை, நெகிழ்வுத் தன்மை, அர்ப்பணிப்பு, உறுதிப்பாடு, நேர மேலாண்மை ஆகிய பண்புகளை இந்த சமுதாயம் வேலை வழங்கும் தொழிற்கூடங்கள் எதிர்பார்க்கும். அதனை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என எச்.சி.எல்., டெக்னாலஜிஸ் லிமிடெட் துணைத் தலைவர் ராமையா சேதுராமலிங்கம் மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் பேசினார்.

பட்டமளிப்பு விழாவிற்கு கல்லுாரி தாளாளர் டென்சிங், நிர்வாக குழு இணைச் செயலாளர் பிருதிவிராஜ் தலைமை வகித்தனர். கல்லுாரி முதல்வர் அறிவழகன் துவக்கி வைத்தார். சென்னை எச்.சி.எல்., டெக்னாலஜிஸ் லிமிடெட் துணைத் தலைவர் ராமையா சேதுராமலிங்கம் மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசியதாவது, 2024 ல் உலக உற்பத்தி தொழில் திறன் மதிப்பு பல மடங்கு உயரப் போகின்றது.

இது தற்போதைய செமி கண்டக்டர் அதாவது குறை கடத்தியின் பயன்பாட்டினால் நிகழப் போகின்றது. உலக அளவில் இந்த குறை கடத்திகளின் வியாபார மதிப்பு பன்மடங்கு உயர்வதால் அனைத்து துறையிலும் நல்ல முன்னேற்றம் மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாகும். ஒரு இளம் பட்டதாரியிடமிருந்து நம்பகத்தன்மை, நேர்மை, நெகிழ்வுத் தன்மை, அர்ப்பணிப்பு, உறுதிப்பாடு, நேர மேலாண்மை ஆகிய பண்புகளை இந்த சமுதாயம் மற்றும் வேலை வழங்கும் தொழிற்கூடங்கள் எதிர்பார்க்கும்.

அதனை செவ்வனே வளர்த்துக் கொள்ள வேண்டும். சமூக ஊடகங்களின் பயன்பாடு தேவையான அளவு இருக்க வேண்டும். ஒவ்வொரு கண்டுபிடிப்பும் மனிதனுக்கும் இவ்வுலகிற்கும் மிகுந்த பயன் அளிப்பதாக இருப்பது மட்டுமின்றி இயற்கைக்கு எந்த கேடும் விளைவிக்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார். பட்டம் பெற்ற மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.






      Dinamalar
      Follow us