/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குளு குளு சூழலில் பள்ளி வளாகம் ஆர்வம் காட்டும் மாணவர்கள்
/
குளு குளு சூழலில் பள்ளி வளாகம் ஆர்வம் காட்டும் மாணவர்கள்
குளு குளு சூழலில் பள்ளி வளாகம் ஆர்வம் காட்டும் மாணவர்கள்
குளு குளு சூழலில் பள்ளி வளாகம் ஆர்வம் காட்டும் மாணவர்கள்
ADDED : டிச 09, 2024 05:06 AM

மரங்கள் வளர்ப்பதற்கான தேவை இன்றைய சூழலில் அதிகமாகி விட்டது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மாசுபாடு காரணமாக மரம் வளர்ப்பின் முக்கியதுவம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஆக்சிஜன் இல்லாமல் உயிரினங்கள் இல்லை. மரங்கள் இல்லாமல் இது கிடைப்பதில்லை. இன்றைய சூழலில் வாகனங்கள் அதிகரித்து விட்ட நிலையில் அவை வெளியிடும்புகையால் அதிகரித்து வரும் மாசுபாட்டை மரங்கள் நட்டால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். இன்றைய காலகட்டத்தில் அதிநவீன தொழில்நுட்ப பயன்பாடு இயற்கையை அழிப்பது மட்டும் அல்லாமல் மனிதர்களையும் அதில் இருந்து பிரிக்கிறது.
நகர் புறங்களில் மாசுபாட்டின் தாக்கம் அதிகமாக உள்ளது. இங்கு இருக்கிற மரங்களை வெட்டி தொழிற்சாலைகள், தொழிலையும் விரிவு படுத்த மரங்களை வெட்டுவதையும் பூமியை அழிப்பதையும் குறிக்கோளாக செய்கின்றனர். கிராம பகுதிகளில் இதன் தாக்கம் குறைவு. இதனால் இங்கு தூய்மையான சூழல் ஏற்படுகிறது.
மரக்கன்றுகளை நடுவதுடன் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் ஊக்குவிக்க வேண்டும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு பள்ளி கல்லூரி மாணவர்கள் மாதம் ஒருமுறை மரம் நடுவதை விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்.
அந்த வகையில், அருப்புக்கோட்டை ராமசாமி நகரில் உள்ள சிவானந்த வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மரங்கள் வளர்ப்பு குறித்து அக்கறையுடன் விழிப்புணர்வு செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாணவர்களும் பள்ளி வளாகத்தில் முக்கியமான நிகழ்வுகள், சுதந்திர தின விழா ஆண்டு விழாக்களில் மரக்கன்றுகளை நடுகின்றனர். பள்ளி ஆசிரியர்களின் ஆலோசனைப்படி பராமரிக்கின்றனர். 37 ஆண்டுகளாக பள்ளியில் மரங்கள் நடப்பட்டு வளர்ந்து இன்று குளு குளு சூழலை ஏற்படுத்தி உள்ளது. இயற்கை சூழலில் மாணவர்களுக்கு படிப்பு கற்றுத் தரப்படுகிறது.
எங்கள் பள்ளியில் மாணவர்களுக்கு படிப்பு மட்டுமின்றி இயற்கை சூழலை பாதுகாக்கும் மரங்கள் வளர்ப்பது பற்றி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அத்துடன் இல்லாமல் மரக்கன்றுகளை நடுதல், முறையாக பராமரித்தல், பயன் தரும் மரங்களை வளர்த்தல் உள்ளிட்ட நன்மைகளை சொல்லி அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறோம். மாணவர்களும் ஆர்வத்துடன் மரக்கன்றுகளை நடுகின்றனர். பள்ளி முழுவதும் 200 க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளது. தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கின்றோம்.
-- சுந்தரராஜன், முதல்வர்.
எங்கள் பள்ளியில் வேம்பு, இச்சி, நெல்லி, புங்கை, அரசமரம், நாவல் மரம் உட்பட பல்வேறு வகையான பயன் தரும் மரங்கள் உள்ளன. மாணவர்களைக் கொண்டு மரங்களை முறையாக பராமரிக்கின்றோம். சுற்றுச்சூழல் அமைப்பு மூலம் மரங்கள் வளர்த்தல் இயற்கை சூழல் உருவாக்குதல் பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்வதால் மாணவர்களுக்கு இயற்கை மீது ஆர்வம் ஏற்படுகிறது மரக்கன்றுகள் நடுவதில் அக்கறை காட்டுகின்றனர். தொடர்ந்து அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் பணியை செய்து வருகின்றோம்.
- ராஜா, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்.