ADDED : ஜன 13, 2025 04:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் சேவா பாரதி, கிரீடா பாரதி அமைப்புக்கள் சார்பில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு சூரிய நமஸ்கார யோகா போட்டி, மங்காபுரம் இந்து மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது.
அமைப்பாளர் மாரிச்சாமி தலைமை வகித்தார். சேவா பாரதி நிர்வாகி ஜோதிகுமார், ஆர்.எஸ்.எஸ்.நிர்வாகி சங்கரலிங்கம் முன்னிலை வகித்தனர். கிரிடா பாரதி மாநில நிர்வாகிகள் திருநாவுக்கரசு, துரைமுருகன் போட்டிகளை துவக்கி வைத்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.