ADDED : ஜூன் 07, 2025 01:01 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டத்தில் தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி கலெக்டர் அலுவலக ஜெ பிரிவு தலைமை உதவியாளர் ராஜீவ் காந்தி ராஜபாளையம் தாசில்தாராகவும், ராஜபாளையம் தாசில்தார் வடிவேல் வெம்பக்கோட்டை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும்,
சிவகாசி தலைமையிட துணை தாசில்தார் ஆண்டாள் வத்திராயிருப்பு தாசில்தாராகவும், வத்திராயிருப்பு தாசில்தார் சரஸ்வதி, விருதுநகர்
நெடுஞ்சாலை அலகு 5 நில எடுப்பு தனி தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய குயிலினி விருதுநகர் முத்திரைத்தாள் தனி தாசில்தாராகவும்,
விருதுநகர் முத்திரைத்தாள் தனி தாசில்தார் செந்தில் வேல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் , சிறுபான்மையினர் நல அலுவலக தனி தாசில்தாராகவும்,
சிவகாசி கோட்ட கலால் அலுவலர் சாந்தி, விருதுநகர் அரசு கேபிள் டிவி தனி தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய ராமசுந்தர், அருப்புக்கோட்டை கோட்டக்கலால் அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.