sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விசைத்தறியாளர்கள் வீடுகளுக்கும் தொழில் கூடத்திற்கான வரி

/

விசைத்தறியாளர்கள் வீடுகளுக்கும் தொழில் கூடத்திற்கான வரி

விசைத்தறியாளர்கள் வீடுகளுக்கும் தொழில் கூடத்திற்கான வரி

விசைத்தறியாளர்கள் வீடுகளுக்கும் தொழில் கூடத்திற்கான வரி


ADDED : நவ 26, 2024 04:38 AM

Google News

ADDED : நவ 26, 2024 04:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: குடிசை தொழில் போல் வீட்டில் தொழில் நடத்தி வரும் விசைத்தறியாளர்கள் வீடுகளுக்கும் தொழில் கூடத்திற்கான வரி விதிப்பை கொண்டு வருவது வாழ்வாரத்தை பாதிக்கும், என அருப்புக்கோட்டை விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

அருப்புக்கோட்டை விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கணேசன் துணைத்தலைவர் ராஜ்குமார் செயலாளர் சரவணன் கூறியதாவது: அருப்புக்கோட்டையில் 7 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. விசைத்தறி உள்ளவர்கள் அவர்கள் குடியிருக்கும் வீடுகளிலேயே நிறுவி தொழில் நடத்தி வருகின்றனர். அவர்கள் சமையல் செய்வது, சாப்பிடுவது, உறங்குவது எல்லாமே சிறிய அளவிலான இடத்தில் தான் நடந்து வருகிறது.

இதில் இலவச மின்சாரம் பெற்றவர்களுக்கு வணிகவரி, கட்டட வரி விதிப்பு செய்வது நெசவாளர்களின் தொழிலை பாதிக்கும். ஏற்கனவே 2022 ல், உயர்த்தப்பட்ட வரி உயர்வு வணிக தொழில் கட்டடங்களுக்கு 100 சதவிகிதம், வீட்டு வரி 600 ரூபாய் உள்ள வீடுகளுக்கு 25 சதவிகிதம் வரி உயர்வு, 600 - - 1200 க்குள் 50 சதவீத வரி உயர்வு, 1200 க்கு மேல் 75 சதவீத வரி உயர்த்தப்பட்டுள்ளது.

அதன் பின், ஆண்டுதோறும் 6 சதவிகித வரி உயர்வு தானாக உயர்த்தப்பட்டு வருகிறது. இவை எல்லாம் மக்களுக்கு மிகப்பெரிய வரிச் சுமையாக இருக்கிறது. இந்நிலையில் சிறு குடிசை தொழில் போல் வீட்டில் தொழில் நடத்தி வரும் விசைத்தறியாளர்கள் வீடுகளுக்கும் தொழில் கூடத்திற்கான வரி விதிப்பை கொண்டு வருவது அவர்களின் வாழ்வாரத்தை பாதிக்கும். இதனால் அரசு வீட்டு வரி விகிதத்தை தொழிற்சாலை வரியாக மாற்றாமல் தொழிலை பாதுகாக்க வேண்டும், என்றனர். இது குறித்து மனுவை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் வழங்கினர்.






      Dinamalar
      Follow us