
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி வேணுகோபாலசாமி கோயில் தேரோட்டம் நடந்தது.
பாலையம்பட்டியில் உள்ள வேணுகோபாலசாமி கோயில் வைகாசி வசந்த விழா ஜூன் 2ல் கொடியேற்றத்துடன் நடந்தது. தினமும் சாமி ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழாவின் முக்கிய நிகழ்வாக திருக்கல்யாணம் ஜூன் 6 நடந்தது. நேற்று மாலை 6:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது.
முக்கிய வீதிகளின் வழியாக தேர் ஊர்வலமாக வந்தது. வேணுகோபாலசாமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.