sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 திருத்தங்கலில் ரயில்வே பாலம் ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

/

 திருத்தங்கலில் ரயில்வே பாலம் ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

 திருத்தங்கலில் ரயில்வே பாலம் ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

 திருத்தங்கலில் ரயில்வே பாலம் ஒப்பந்தப்புள்ளி வெளியீடு


ADDED : நவ 20, 2025 03:59 AM

Google News

ADDED : நவ 20, 2025 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசி சாட்சியாபுரம், திருத்தங்கலில் ரயில்வே கிராசிங்குகளில் மேம்பாலம் அமைக்க மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். 2024ல் சாட்சியாபுரம் கிராசிங்கில் மேம்பாலம் ரூ.62 கோடியில் கட்டப்பட்டு கடந்த வாரம் திறக்கப்பட்டது.

விழாவில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு திருத்தங்கல் ரயில்வே மேம்பால திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த ரூ.32 கோடியும், கட்டுமான பணிக்கு ரூ.45.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் ஒப்பந்தம் விடப்பட்டு, அடிக்கல் நாட்டும் பணி துவங்கும் என தெரிவித்தார். இந்நிலையில் மேம்பாலம் அமைக்க ஒப்பந்த புள்ளி வெளியிடப்பட்டு உள்ளது. விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் (நவ. 19) முடிந்த நிலையில் டிச.30ல் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருத்தங்கல் பாலத்திற்கான பூர்வாங்க பணி தொடங்கி உள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us