sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வெண்ணை உருண்டை பாறை பாதுகாக்கப்பட்ட சின்னமானது

/

வெண்ணை உருண்டை பாறை பாதுகாக்கப்பட்ட சின்னமானது

வெண்ணை உருண்டை பாறை பாதுகாக்கப்பட்ட சின்னமானது

வெண்ணை உருண்டை பாறை பாதுகாக்கப்பட்ட சின்னமானது


ADDED : ஏப் 19, 2025 07:08 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 07:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே மீனாட்சிபுரத்தில் வானிறைக்கல் உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக தமிழக தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

தென்மலை செல்லும் வழியில் குன்றக்குடி என அழைக்கப்படும் குன்றுகளில் பாறை ஓவியங்கள், வெண்ணை உருண்டை எனப்படும் வானிறைப் பாறை, குகைகள் உள்ளன. இதன் அருகே உள்ள புத்துார், மாங்குடி உள்ளிட்ட பகுதியில் தொல்லியல் சிற்பங்கள் சமணர் படுக்கை உள்ளிட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்கள் பாதுகாப்பின்றி உள்ளன.

ஏப்., 9ல் இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. நேற்று முன்தினம் மீனாட்சிபுரம் வானிறைக்கல், குகை ஓவியம், புடைப்புச் சிற்பங்கள் உள்ளிட்டவற்றை பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இப்பகுதி வரலாற்று ஆர்வலர்கள், தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

அதேபோல, திருப்பூர் மாவட்டத்தில், அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கும் வரவேற்பு தெரிவித்துள்ள வரலாற்று ஆய்வாளர்கள், அதுகுறித்த செய்தி வெளியிட்டு உதவிய நம் நாளிதழுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us