sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கண்ணக் குடும்பன்பட்டியில் பயன்பாட்டிற்கு வராமலேயே சேதமான இ சேவை மைய கட்டடம் *அரசு நிதி வீணடிக்கப்பட்டதால் மக்கள் அதிருப்தி

/

கண்ணக் குடும்பன்பட்டியில் பயன்பாட்டிற்கு வராமலேயே சேதமான இ சேவை மைய கட்டடம் *அரசு நிதி வீணடிக்கப்பட்டதால் மக்கள் அதிருப்தி

கண்ணக் குடும்பன்பட்டியில் பயன்பாட்டிற்கு வராமலேயே சேதமான இ சேவை மைய கட்டடம் *அரசு நிதி வீணடிக்கப்பட்டதால் மக்கள் அதிருப்தி

கண்ணக் குடும்பன்பட்டியில் பயன்பாட்டிற்கு வராமலேயே சேதமான இ சேவை மைய கட்டடம் *அரசு நிதி வீணடிக்கப்பட்டதால் மக்கள் அதிருப்தி


ADDED : ஜூன் 24, 2025 03:03 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 03:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் விஜயகரிசல்குளம் ஊராட்சி கண்ணக் குடும்பன்பட்டியில் பயன்பாட்டிற்கு வராமலேயே சேதமடைந்த கிராம இ சேவை மைய கட்டடத்தால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

விஜய கரிசகுளம் ஊராட்சி கண்ணக் குடும்பன்பட்டியில் 11 ஆண்டுகளுக்கு முன்பு கிராம இ சேவை மையம் கட்டப்பட்டது. கட்டப்பட்ட நாளிலிருந்து பயன்பாட்டிற்கு வராத இக்கட்டணம் தற்போது முழுமையாக சேதம் அடைந்து விட்டது. மற்ற ஊராட்சிகளில் இ சேவை மைய கட்டடம் ஊராட்சி அலுவலகமாகவும் ,ரேஷன் கடையாகவும், நுாலகமாகவும் என ஏதோ ஒரு தேவைக்கு செயல்பட்டு வருகிறது. ஆனால் இங்கு கட்டடம் எந்த பயன்பாட்டிலும் இல்லாமல் சேதமடைந்துவிட்டது. இதனால் இக்கிரமத்தைச் சேர்ந்த மக்கள் இ சேவையை பயன்படுத்த ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெம்பக்கோட்டை, சாத்துார் செல்ல வேண்டிய நிலை உள்ளது . அதே சமயத்தில் வெம்பக்கோட்டைக்கு செல்ல நேரடியான பஸ் வசதி இல்லாததால் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் கட்டடத்திற்கு அருகில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. பள்ளி மாணவர்கள் விபரீதம் அறியாமல் சேதம் அடைந்த கட்டடத்தின் அருகிலேயே விளையாடுகின்றனர். மாணவர்கள் விளையாடும் போதோ மக்கள் நடமாடும் போதோ கட்டடம் இடிந்து விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கட்டடத்தில் மராமத்து பணிகள் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us