sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நவ.14ல் நான்காவது புத்தகத்திருவிழா

/

நவ.14ல் நான்காவது புத்தகத்திருவிழா

நவ.14ல் நான்காவது புத்தகத்திருவிழா

நவ.14ல் நான்காவது புத்தகத்திருவிழா


ADDED : அக் 30, 2025 03:40 AM

Google News

ADDED : அக் 30, 2025 03:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நான்காவது புத்தகத் திருவிழா நவ. 14 முதல் நடக்கவுள்ளதை முன்னிட்டு 'அறிவும் வளமும்' என்ற தலைப்பில் லோகோ வெளியிடப்பட்டது.

நான்காவது விருதுநகர் புத்தக திருவிழா - 2025 'அறிவும் வளமும்'என்ற தலைப்பில், விருதுநகர் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி வளாக மைதானத்தில் நவ. 14 முதல் 24 வரை 11 நாட்கள் நடக்கிறது.

இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், தொல்லியல் துறை அரங்குகள், அறிவரங்கம், பசுமை அரங்குகள், புத்தக நன்கொடை அரங்கு, குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்குகள் உள்ளிட்டவை அமைக்கப் படவுள்ளன.

பிரபல எழுத்தாளர்கள், தலைசிறந்த ஆளுமைகளின் சிறப்புரைகள், பட்டிமன்றங்கள், பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், “அறிவும் வளமும்” என்ற தலைப்பில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட லோகோவை கலெக்டர் சுகபுத்ரா வெளியிட்டார். மக்கள், மாணவர்கள், இளைஞர்கள், புத்தக வாசிப்பை விரும்பும் அனைவரும் பங்கேற்று பயன்பெறலாம்.






      Dinamalar
      Follow us