sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

திருப்பதி கொண்டு செல்லப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை

/

திருப்பதி கொண்டு செல்லப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை

திருப்பதி கொண்டு செல்லப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை

திருப்பதி கொண்டு செல்லப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை


ADDED : செப் 26, 2025 10:56 PM

Google News

ADDED : செப் 26, 2025 10:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்:திருப்பதியில் நடக்கும் புரட்டாசி பிரமோத்ஸவத்தின் ஐந்தாம் நாளில் கருட சேவையின் போது ஏழுமலையானுக்கு சாற்றுவதற்காக, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பரிவட்டம் நேற்று கோயிலில் இருந்து கொண்டு செல்லப்பட்டது.

நேற்று மதியம் 1:30 மணிக்கு வெள்ளி குறடு மண்டபத்தில் ஆண்டாளுக்கு மாலை, கிளி, பரிவட்டம் சாற்றப்பட்டு, ராஜா பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பின்னர் ஆண்டாளுக்கு சாற்றப்பட்ட மாலை, கிளி, பரிவட்டங்களை ஸ்தானிகம் ஹயக்ரீவாஸ், கோயில் பட்டர்கள் மாடவீதிகள் சுற்றி கொண்டு வந்தனர்.

பின்னர் கார் மூலம் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

விழாவில் அறநிலையத்துறை இணை ஆணையர் மாரியப்பன், செயல் அலுவலர் சக்கரை அம்மாள், ராம்கோ இயக்குனர் ஸ்ரீகண்டன் ராஜா,பட்டர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். இந்த மாலையை இன்று திருப்பதி கோயில் நிர்வாகம் பெற்றுக் கொள்கிறது.

நாளை கருட சேவையின் போது சுவாமி சாற்றப்படுகிறது.






      Dinamalar
      Follow us