/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் நென்மேனியில் இன்னாசியார் தேர்பவனி
/
சாத்துார் நென்மேனியில் இன்னாசியார் தேர்பவனி
ADDED : ஆக 01, 2025 01:55 AM

விருதுநகர்: சாத்துார் அருகே நென்மேனி புனித இன்னாசியார் சர்ச்சில் தேர்பவனி நடந்தது. இதில் திரளான மக்கள் பங்கேற்றனர்.
சாத்துார் அருகே நென்மேனி புனித இன்னாசியார் சர்ச்சில் 136வது ஆண்டு திருவிழா ஜூலை 22ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு சென்னை நற்செய்தி குழுவினரின் ஆராதனை வழிபாடுகள் நடந்தது. அருட்பணியாளர்கள் ரொனால்டு, சகாய ஜான் தலைமையில் திருப்பலி, மறையுரை நடந்தது. இரவு 11:30 மணிக்கு விருதுநகர் மறைவட்ட அதிபர் அருள்ராயன், அருட்பணியாளர்கள் பெர்னாட்ஷா, காந்தி, அருள்தாஸ், பிரின்ஸ், தேவராஜ் முன்னிலையில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி, மறையுரை நடந்தது.
நேற்று அதிகாலை 3:00 மணிக்கு அமலோற்பவ அன்னை, இன்னாசியார் திருஉருவங்கள் மின் அலங்கார தேர்பவனி நடந்தது. காலை 11:00 மணிக்கு நன்றி திருப்பலி, நற்கருணை ஆசீரும் முடிந்து கொடியிறக்கம் செய்யப்பட்டு திருவிழா நிறைவடைந்தது.