sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மனதை மயக்கும் பூங்கா முகத்தை சுளிக்கும் துர்நாற்றம்

/

மனதை மயக்கும் பூங்கா முகத்தை சுளிக்கும் துர்நாற்றம்

மனதை மயக்கும் பூங்கா முகத்தை சுளிக்கும் துர்நாற்றம்

மனதை மயக்கும் பூங்கா முகத்தை சுளிக்கும் துர்நாற்றம்


ADDED : ஜன 24, 2025 04:11 AM

Google News

ADDED : ஜன 24, 2025 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் நகராட்சி பூங்கா நன்கு பராமரிப்புடன் மயங்க வைக்கும் வகையில் இருந்தாலும் அருகில் உள்ள உரக்கிடங்குகளில் வரும் நாற்றத்தால் முகத்தை சுளிக்க வைக்கிறது.

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மயான ரோட்டில் நகராட்சி பூங்கா ஒரு ஆண்டிற்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்தப் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட தெருக்களில் உள்ள மக்களுக்கு காலை மாலை நேரங்களில் பொழுது போக்க வசதியாக உள்ளது. பூங்காவில் சிறுவர்கள் விளையாட உபகரணங்கள், இருக்கை வசதிகள், வாக்கிங் செல்ல நடைபாதை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பூங்கா நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருவதால் இந்த பகுதி மக்கள் இங்கு விரும்பி வருகின்றனர்.

ஆனால் பூங்காவிற்கு அருகில் நகராட்சியின் மினி உரக்கிடங்கு உள்ளது. சொக்கலிங்கபுரம் பகுதிகளில் சேகரிக்கப்படும் மட்கும், மக்காத குப்பைகள் இங்கு தரம் பிரிக்கப்பட்டு கழிவுகள் நகராட்சியின் குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மட்கும் மக்காத குப்பைகளில் ஏற்படும் துர்நாற்றம் அருகிலுள்ள பூங்கா வரை செல்வதால் மக்களின் முகத்தை சுளிக்க வைக்கிறது. நாற்றம் தாங்க முடியாமல் பூங்காவிற்கு வர மக்கள் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us